துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

புனித லைலத்துல் கத்ர் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவின் நன்மைகளை அனைவரும் அடைவதற்காகக் கூடியிருக்கிறோம். அதன் பலனை அனைவரும் பெற வேண்டும். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு நலப்பணிகளை குறிப்பாக நோன்பாளிகளுக்கு தினமும் வழங்கி வரும் நோன்புக் கஞ்சி விநியோகப் பணிகளைப் பாராட்டினார்.
முன்னதாக ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃரூப் சீருரை ஆற்றினார். அவர் தனது உரையில் புனித ரமலான் மாதத்தை அடைந்துள்ள நாம் இறையச்சமுடையவர்களாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாயகத்திலிருந்து வந்திருந்த அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் வி.பி. முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி எம்.ஏ. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ரமலான் மாதத்தில் சிறு சிறு விஷயங்களில் தங்களது கவனங்களை சிதறுவிடுவதை விட்டும் தடுத்துக் கொண்டு அதிகமதிகம் அமல்கள் செய்யக்கூடியவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
குவைத் பள்ளி இமாம் ஷேக் அல் ஹாபிழ் ஈதி அல் ஹபாரி அவர்கள் அரபு மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மிகுந்த ஆர்வமுடன் புனித இரவின் நன்மைகளை அடையக் கூடியிருக்கும் அனைவரையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் இமாம் அல் ஹபாரி மற்றும் சிறப்பு அழைப்பாளர் மௌலவி முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பள்ளியின் இமாம் அல் ஹபாரி அவர்கள் ரமலான் மாதத்தின் 27 தினங்களில் திருக்குர்ஆனை முழுமையாக தொழுகையில் ஓதி முடித்தமைக்காக மலர்க் கொத்து வழங்கி பாராட்டப்பட்டார்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான் நபிபுகழ் பாடினார்.
ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியினை மக்கள் தொடர்பு செயலாளர் தொகுத்து வழங்கினார்.
சொற்பொழிவுக்குப் பிறகு தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications