துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

புனித லைலத்துல் கத்ர் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவின் நன்மைகளை அனைவரும் அடைவதற்காகக் கூடியிருக்கிறோம். அதன் பலனை அனைவரும் பெற வேண்டும். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு நலப்பணிகளை குறிப்பாக நோன்பாளிகளுக்கு தினமும் வழங்கி வரும் நோன்புக் கஞ்சி விநியோகப் பணிகளைப் பாராட்டினார்.
முன்னதாக ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃரூப் சீருரை ஆற்றினார். அவர் தனது உரையில் புனித ரமலான் மாதத்தை அடைந்துள்ள நாம் இறையச்சமுடையவர்களாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாயகத்திலிருந்து வந்திருந்த அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் வி.பி. முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி எம்.ஏ. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ரமலான் மாதத்தில் சிறு சிறு விஷயங்களில் தங்களது கவனங்களை சிதறுவிடுவதை விட்டும் தடுத்துக் கொண்டு அதிகமதிகம் அமல்கள் செய்யக்கூடியவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
குவைத் பள்ளி இமாம் ஷேக் அல் ஹாபிழ் ஈதி அல் ஹபாரி அவர்கள் அரபு மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மிகுந்த ஆர்வமுடன் புனித இரவின் நன்மைகளை அடையக் கூடியிருக்கும் அனைவரையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் இமாம் அல் ஹபாரி மற்றும் சிறப்பு அழைப்பாளர் மௌலவி முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பள்ளியின் இமாம் அல் ஹபாரி அவர்கள் ரமலான் மாதத்தின் 27 தினங்களில் திருக்குர்ஆனை முழுமையாக தொழுகையில் ஓதி முடித்தமைக்காக மலர்க் கொத்து வழங்கி பாராட்டப்பட்டார்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான் நபிபுகழ் பாடினார்.
ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியினை மக்கள் தொடர்பு செயலாளர் தொகுத்து வழங்கினார்.
சொற்பொழிவுக்குப் பிறகு தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications