சென்னையில் மரணகானா விஜியின் கானா பாடல் இசை நிகழ்ச்சி
மதுரை: சென்னையில் மரணகானா விஜியின் கானா பாடல் இசை நிகழ்ச்சி ஜெர்மன் அரங்கில் நடைபெறுகின்றது.
பெரியார் திராவிடர் கழகம், தோழர் மரணகானா விஜி ஒருங்கிணைந்து கானா பாடல் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இது சென்னை, தியராகராயநகரில் உள்ள ஜெர்மன் அரகங்கில் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகினறார். மைக்கேல், சிட்டு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் இந்த நிகழ்சியில் தமிழ்பிரபா, ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, மகேசு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
அடித்தட்டு மக்களின் கலையாகிய கானா, கிராமியப் பாடல்கள், பறை இசை போன்றவற்றை பயன்படுத்தி பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை வீதி நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆர்வமுள்ள தோழர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி பட்டறை தொடங்குவதற்கு நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications