அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல திருவிழா துவக்கம்: 25ல் தேரோட்டம்

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடி பட்டம் ஏற்றப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.
வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தின் போது ஐயப்பனின் அபூர்வ தங்க வாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் காலையும், இரவும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications