வேலை பார்க்கும் தாய்மார்களே உஷார்-குழந்தைகளை டேகேரில் விட்டால் இதய நோய் வரும்

Subscribe to Oneindia Tamil

Day care centre
லண்டன்: குழந்தைகளை டேகேரில் கொண்டு விடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் இதய நோய் வரும் என்றும் இங்கிலாந்து மனோதத்துவ நிபுணர் எச்சரி்க்கை விடுத்துள்ளார்.

இன்றைய இயந்திர உலகில் தந்தையும், தாயும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் தங்களின் குழந்தைகளை கொண்டு போய் டேகேரில் விடுகின்றனர். அங்கு குழந்தைகள் தாயின் அரவணைப்பின்றி யாரோ ஒரு ஆயாவிடம் இருக்கிறது. இது தான் இன்றைய லைப்ஸ்டைல். டேகேரில் நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழகி விளையாடும் என்று பெற்றோர் நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. குழந்தைகளை டேகேரில் விடுவதால் அவர்கள் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று மனோதத்துவ நிபுணர் தெரிவித்துளார்.

இது குறித்து இங்கிலாந்து மனோதத்துவ நிபுணர் அரிக் சிக்மேன் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது,

சின்னப் பிள்ளைகளை டேகேரில் விடும்போது அவர்களை யாரோ தெரியாத நபர் பராமரிக்கிறார். இதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

அடுத்தவர்கள் பராமரிப்பில் இருப்பதால் குழந்தைகளுக்கு இருமல், தடுமலில் ஆரம்பித்து இதய நோய் வரை ஏற்படும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் டேகேரினால் ஏற்படும் விபரீதங்களைத் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். ஒரு குழந்தைக்கு சிறந்தது தாயின் அரவணைப்பா அல்லது டேகேர் ஆயாவின் பராமரிப்பா?

டேகேர் செல்லும் குழந்தைகளின் மன அழுத்தம் 3 வயது வரை தான் அதிகரிக்கிறது. இருப்பினும் இந்த காலகட்டத்தில் தான் குழந்தைகளின் மூளை படுவேகமாக வளரும் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+