கோக் நிறுவனத்தின் 'ஹேப்பினஸ் அம்பாசடர்' சச்சின் டெண்டுல்கர்

இதுகுறித்து நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் வாசிம் பசிர் கூறுகையில், சச்சினை எங்களது நிறுவனத்தின் ஹேப்பினஸ் அம்பாசடராக இணைத்திருப்பதில் பெருமை அடைகிறோம். கோக் தொடர்பான நடவடிக்கைகள், விளம்பரங்கள் மூலம் மக்களிடையே மகிழ்ச்சியை பரப்ப அவர் உதவுவார் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு வரை சச்சின், பெப்சி நிறுவனத்தின் அம்பாசடராக நீண்ட காலம் இருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால், திடீரென சச்சின் உள்ளிட்டவர்களை அடுத்தடுத்து கழற்றி விட்டு விட்டது பெப்சி. வயதானவர்களை நீக்கி விட்டு இளைய தலைமுறையினரை நியமிக்கும் திட்டத்தின் கீழ் இதைச் செய்தது. இதனால் சச்சின் தவிர கங்குலி, ராகுல் டிராவிட், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்களை தனது பிராண்ட் அம்பாசடர் பொறுப்புகளிலிருந்து கழற்றி விட்டது.
ஆனால் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்து தனது ஆட்டத்திற்கும், கிரேஸுக்கும் இன்னும் வயசாகவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டார் சச்சின். இந்த பாப்புலாரிட்டியை சரியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது கோக்.
கோக் நிறுவனத்தில் இணைவது குறித்து சச்சின் கூறுகையில், மகிழ்ச்சியாக இருக்கிறது. கோக் நிறவனத்துடன் நீண்ட இன்னிங்ஸை ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications