விஷ்ணுவுக்கு உகந்த நெல்லிக்கனி
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததில் இருந்து நெல்லிமரம் தோன்றியது என்கின்றன புராணங்கள்.
மரவகைகளில் ஒன்றான நெல்லி மரம், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருள் பெற்றதாகும். நெல்லிக்கனியை ஹரிபலம் என்றும் அழைப்பார்கள், ஹரி என்றால் விஷ்ணு என்றும் அர்த்தம். துவாதசி அன்று சாப்பிடும் போது நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால்தான் ஏகாதசி விரதப்பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய், நெல்லிமரப்பட்டை, முதலிய எல்லாப்பகுதிகளும் மருத்துவகுணம் கொண்டவை. கிணற்று நீரை தூய்மை செய்ய நெல்லிக்கட்டையை போடுவது கிராமங்களில் உள்ள வழக்கம்.
உலர்நெல்லி, குடல்புண்ணை ஆற்றக்கூடியது. நோயற்ற வாழ்வு, தூய்மை, வருமானம், உள்ள இடத்தில் மகாலட்சுமி இருப்பாள். எனவே நெல்லி மரம் உள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.












Click it and Unblock the Notifications