இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக சீக்கியர் பதவியேற்பு
லண்டன்: மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் ரபிந்தர் சிங்(47) இங்கிலாந்து நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்த பதவி வகிக்கும் முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது வெள்ளையர் அல்லாத நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 1982ம் ஆண்டு சர் மோட்டா சிங் என்பவர் இங்கிலாந்தின் கிரவுன் நீதிமன்றத்தின் முதல் சீக்கிய நீதிபதியானார். ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதியாகியிருக்கும் முதல் சீக்கியர் என்ற பெருமையை ரபிந்தர் சிங் பெற்றுள்ளார்.
ரபிந்தர் பிரிஸ்டன் கிராமர் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். மேட்ரி்கஸ் சேம்பரின் நிறுவனர். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் மனைவி ஷெரீ பிளேர் தான் அந்த அமைப்பின் துணை நிறுவனர்.
அண்மையில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதில் ரபிந்தர் சிங் தவிர மீதமுள்ள 4 பேரும் வெள்ளையர்கள். ரபிந்தர் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி திறமையாக வாதாடி புகழ் பெற்றவர்.
லா சொசைட்டி கெசட் முன்பு பேசிய அவர் கூறியதாவது,
வழக்கறிஞராகிய நான் பிறப்பால் ஒரு சீக்கியர். ஆனால் நான் ஒரு சீக்கிய வழக்கறிஞர் என்று என்றுமே கூறியதில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். நான் யார் என்பதைப் பார்த்தாலே தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications