துபாயில் 'வஹியாய் வந்த வசந்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil

இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாய் அல் கூஸ் பகுதியில் கடந்த 30-ம் தேதி மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டிணம் எஸ்.பி.எஸ். நிஜாம் தலைமை வகித்தார். பழையபாலப்பட்டு எஸ். ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எம்.ஏ. ஆரிப் அவர்கள் இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் எனும் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
நிகழ்வில் ஏரல் கே. முஜிப் ரகுமான், மறவாய்க்குடி எம். பஷீர் அஹமத், எக்ககுடி எஸ். ஹபிப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications