Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை சித்திரைத் தேரோட்டம்-மாசி வீதிகளில் பவனி வந்த மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அன்னை மீனாட்சியும், பெருமான் சொக்கநாதரும், மாசி வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டைத்தைக் கண்டு களித்தனர்.

மதுரை மாநகரே சித்திரைத் திருவிழாவால் பூரிப்படைந்து காணப்படுகிறது. சித்திரைத் திருவிழாவில் நேற்று மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தேறியது. இதை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு அம்மனையும், பெருமானையும் வணங்கினர்.

இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் தொடங்கிய இந்த தேரோட்டத்தைதக் காண நான்கு மாசி வீதிகளிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு நின்றிருந்தனர். பெரிய தேரில் சொக்கநாதப் பெருமானும், பிரியாவிடையும் வலம் வந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் வந்தார். தேரோட்டத்தில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

இன்று இரவு 7 மணிக்கு ஒரே சப்த வர்ண சப்பரத்தில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை ஆகியோர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருவார்கள். இதையும் காண மக்கள் திரண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+