குமரிக்கு 1.50 லட்சம் பயணிகள் வருகை!

Subscribe to Oneindia Tamil

Swami Vivekananda Rock Memorial
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் படகு சேவையில் தற்போது எம்.எல்.குகன்,எம்.எல்.பொதிகை மற்றும் பாகீரதி ஆகிய மூன்று படகுகள் ஈடுபட்டுள்ளன.

புதிய படகு

இதில் பாகீரதி படகிற்கு பதிலாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய படகு வாங்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் கட்டுமான பணி முடிந்துள்ளது. தற்போது கிளியரன்ஸ் சர்ட்டிபிக்கேட் வாங்கும் பணி நடந்து வருகிறது. புதிய படகிற்கு எம்.எல்."விவேகானந்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படகில் 150 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த புதிய படகு மற்ற 3 படகுகளை விட வேகமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேர்

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தற்போது கன்னியாகுமரியில் சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+