அல் அய்னில் நடந்த தமிழ் மாலை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

உலக நகைச்சுவையாளர் மன்ற துபாய் கிளை நிறுவன புரவலர் குணா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நகைச்சுவையோடு மக்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய சிறந்த உரை ஆற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து கவியரங்கம் அரங்கேறியது. இறுதியாக குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் கணவனா? மனைவியா? என்ற பட்டிமன்றம் பார்வையாளர்களின் மிகுந்த ஆரவாரத்தோடு நடந்தது.
அல் அய்ன் வாழ் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் ஆர்வத்தோடு பெருந்திரளாக கலந்துகொண்டது தமிழர்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பற்று என்றும் மாறாது என்பதற்கான சான்றாக விளங்கியது. அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications