புலவர் இறைக்குருவனா உடல்நலக் குறைவால் காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழறிஞரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனுமான "திருக்குறள் மணி" புலவர் இறைக்குருவனார் (வயது 70) உடல்நலக் குறைவால் காலமானார்.
தஞ்சாவூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு சென்னை செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட்டது. பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னைக்கு இன்று முற்பகல் கொண்டுவரப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் இருக்கும் தமிழ்க்களத்தில் புலவர் இறைக்குருவனாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொலைக்காட்சியில் தமிழக ஊர்ப்பெயர்கள் பற்றி அரிய செய்திகளை வழங்கியவர். தமிழ் ஓசை நாளிதழில் பணியாற்றியவர். வயிரமூக்குத்தி, வல்லினம் மிகுதலும் மிகாமையும் போன்ற நூல்களை எழுதியவர்.












Click it and Unblock the Notifications