ஏரல் சேர்மன் கோவில் தை அமாவாசை விழா
ஏரல்: ஏரல் சேர்மன் கோவிலில் இன்று தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பிரசித்த பெற்ற சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தை அமாவாசை விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வந்தார்.
முக்கிய விழாவான அமாவாசை திருவிழா இன்று (22ம் தேதி) நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1.30 மணிக்கு சுவாமிக்கு உருகு பலகை தரிசன அபிஷேகம், மாலை 4 மணிக்கு விலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் கால கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடந்தது.
23ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1.30 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி அபிஷேகம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோவில் வந்து சேரும் ஆனந்த காட்சி ஆகியவை நடக்கின்றன.
நிறைவு விழாவான 24ம் தேதி காலை தாமிரபரணியில் சுவாமி நீராடல் நிகழ்ச்சி, பகல் 12.30க்கு அன்னதானம், இரவு சுவாமி ஆழிலை சயனம் மங்கலம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏரலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications