துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா

விழாவிற்கு ஏ.டி. பைசுர் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.எம். அப்துல் முஹம்மது இறைவசனங்களை ஓதினார். சூப்பர் சோனிக் நிறுவன மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். எஸ்.ஜே. பாதுஷா முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினா.
சிறப்பு விருந்தினராக ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹைதீன் பங்கேற்று சமுதாய சேவையின் அவசியம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். ஏ.எஸ்.அன்வர் அலி, கே.ஏ. அஷ்ரஃப் அலி, ஏ.எஸ். முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்டோர் சிற்றுரை நிகழ்த்தினர்.
பூதமங்கலம் நலச்சங்க புதிய தலைவராக ஏ.எஸ்.எம். முஹைதீன் அப்துல் காதர், துணைத் தலைவராக ஏ.கே.எஸ். அக்பர் அலி, செயலாளராக எஸ்.ஜே. பாதுஷா மைதீன், இணைச் செயலாளராக ஏ.ஏ. நைனார் முஹம்மது, பொருளாளராக என்.எஸ். சாகுல் ஹமீது, துணைப் பொருளாளராக பி.என். அப்துல் அஜீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். என்.எஸ். ஷாகுல் ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, அமீரக காயிதே மில்லத் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், பூதமங்கலம் நலச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications