துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஏற்பாடு
துபாய்: துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய சுதந்திர தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் உள்ளிட்டவற்றையொட்டி சிறப்பு ரத்ததான முகாமினை 16.08.2013 அன்று காலை அல் கரூத் பகுதியில் அமைந்துள்ள கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியில் நடத்தியது. இம்முகாம் இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய சமூக நல அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா பங்கேற்று தானும் ரத்ததானம் செய்து முகாமினை துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம், கை கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக துபாய் லத்திஃபா மருத்துவமனை ரத்ததான வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் ஹைதர் பங்கேற்றார். அவர் தொடர்ந்து ரத்ததான முகாம் மூலம் ரத்தவங்கிக்கு ரத்தத்தை சேகரித்து வழங்கி வரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்திய சமூக நல அமைப்பின் (Indian Community Welfare Committee - ICWC) கன்வீனர் கே. குமார் தனது உரையில் உயிர் காக்கும் உன்னதானம் ரத்ததானம். இப்பணியினை தொடர்ந்து மெற்கொண்டு வரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு எல்லாவித ஒத்துழைப்பும் நல்கப்படும் என்றார்.

ஜைனப் ஹைதர், கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியின் முதல்வர் ஆஷா அலெக்ஸாண்டர் மற்றும் அணுசரனையாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ரத்ததான முகாமில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றோருக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும், பழரசம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஃபியூச்சர் விஷன், கோட்டூர் இன்டீரியர்ஸ் அன்ட் பர்னிச்சர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, 105.4 ரேடியோ ஸ்பைஸ் ஆகியவை வழங்கின.












Click it and Unblock the Notifications