ஸ்போக்கன் இங்கிலீஸ், கணினிப் பயிற்சி -துபாய் தொழிலாளர்களுக்கு சான்றிதழ், பாராட்டு
துபாய்: துபாயில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
துபாயில் உள்ள எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மெண்ட் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் பங்கேற்று ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிற்சிகளின் மூலம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பயிற்சிகளின் மூலம் ஆங்கிலம் பேசவும், கணினியை இயக்கவும் தெரிவதாக பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர். தங்களது நண்பர்களையும் இப்பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற உற்சாகப் படுத்தி வருவதாக தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications