இன்று துபாயில் ஈமான் அமைப்பின் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 10.45 மணிக்கு நடைபெறுகிறது.
துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 10.45 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடைபெற இருக்கிறது என பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு 10.45 மணிக்கு நடைபெறும். சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் இரவு 12.00 மணிக்கு நடைபெறும். இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 51 96 433 / 050 475 30 52 / 050 658 9305 / 055 800 79 09 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: அனைவருக்கும் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.