மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா .. ஏப். 14ம் தேதி தொடக்கம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதியில் காலை 10.46 மணி முதல் 11 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படுகிறது. அங்கு சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருள சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமியும், அம்மனும் தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதற்காக மாசிவீதிகளில் உள்ள கடைக்காரர்கள் வாகனத்தை தட்டாதவாறு பந்தல் அமைக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுள்ளது.

21ம் தேதி பட்டாபிஷேகம்
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேகம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அம்மன் சன்னதியில் இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டம் சூட்டி, செங்கோல் வழங்கப்படுகிறது.

23ம் தேதி திருக்கல்யாணம்
22-ந் தேதி மாசி வீதிகளில் திக்குவிஜயம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 23-ந் தேதி வடக்கு-மேற்கு ஆடி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருக்கல்யாணம் காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் நடக்கிறது. திருமணம் முடிந்து சுவாமியும், அம்மன் பழைய திருக்கல்யாண மண்படத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

24ம் தேதி தேரோட்டம்
பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் ஆடி வீதிகளில் ரூ.10 லட்சம் செலவில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. மேலும் கோடை வெயிலை சமாளிக்க திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் குளு, குளு வசதியும் செய்யப்பட உள்ளது. 24-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.

25ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்
மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 25-ந் தேதி காலையில் நடக்கிறது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து 23-ந் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள், கள்ளர் வேடத்தில் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
சித்திரைத் திருவிழாவையொட்டி கோவிலிலும், வைகை ஆற்றுப் பாலப் பகுதிகளிலும், நகரிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications