அபுதாபி வழக்காடு மன்றத்தில் நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் "பாரதி நட்புக்காக" என்ற தமிழ் அமைப்பின் சார்பில் தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அபுதாபியில் சிறப்பாக செயல்பட்டு வரும் "பாரதி நட்புக்காக" அமைப்பு அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி தமிழர்களை மகிழ்வித்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த வருடமும் தமிழர் திருநாள் நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபி இந்தியன் பள்ளியில் நடத்தியது. அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபுதாபி நடனக் கலை ஆசிரியர் ஆஷா நாயர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து "இன்றைய வாழ்க்கைமுறை மகிழ்ச்சியானது என்பது குற்றம்" என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் நடந்த வழக்காடு மன்றத்தில் பேராசிரியர் பு.சி.கணேசன் மற்றும் பேராசிரியர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்த கொண்டனர். இலக்கியத்துடன் கூடிய இவ்வழக்காடு மன்றம் அபுதாபி மக்களுக்கு நல்விருந்தளித்தாய் அமைந்தது.

விழாவில் அணுசரனை வழங்கிய புரவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+