துபாயில் இந்திய குடியரசு தினத்தையொட்டி சிறப்பு விருந்து: அமீரக கல்வி அமைச்சர் பங்கேற்பு

துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா மற்றும் மனைவியும் ஏற்பாடு செய்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் அமீரக கல்வி அமைச்சர் ஹுமைத் முஹம்மது ஒபைத் அல் கத்தமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அமீரகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்காளியாகவும் அமீரகம் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அரசு உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், இந்திய சங்கத்தின் பிரதிநிதிகள், ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications