நெல்லையில் ஜூன் 14ம் தேதி புத்தக திருவிழா ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

Book
நெல்லை: பாளையில் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி புத்தக திருவிழா ஆரம்பமாகிறது. திருவிழா மலருக்கு படைப்புகளை வரும் 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10 நாட்கள் நெல்லை மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நெல்லை புத்தக திருவிழாவை நடத்துகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில ஊடக புத்தக விற்பனை அரங்குகள் பல்வேறு பதிப்பாளர்களால் அமைக்கப்படுகிறது. திருவிழா நடக்கும் 10 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்காக தனியாக
உணவகம் அமைக்கப்படுகிறது. புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நெல்லை புத்தக திருவிழா மலர் வெளியிடப்படுகிறது. இந்த மலரில் தாமிரபரணி, நெல்லை மாவட்டம் சார்ந்த பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்த கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள், செய்திகள் வரவேற்கப்படுகிறது.

படைப்புகள் மற்றும் விளம்பரங்களை துணைத் தலைவர், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், உழுவை சாலை, அரசு அலுவலர் அ குடியிருப்பு, பாளையங்கோட்டை என்ற முகவரிக்கு தபாலிலும் அனுப்பி வைக்கலாம். இல்லெயனில் இமெயில் மூலமும் அனுப்பலாம். படைப்புகளை ஜூன் மாதம் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். புத்தக திருவிழா விபரங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட இணையதளத்தில் பார்க்கலாம். புத்தக ஆர்வலர்கள் இந்த புத்தக திருவிழாவை பயன்படுத்தி புதிய படைப்புகளை பதிவு செய்வதுடன், அதிக அளவில் புத்தகங்களை வாங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+