துபாயில் கூடிய அமீரக காயிதே மில்லத் பேரவை செயற்குழு
கூட்டத்திற்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துவக்கமாக கலீல் பிலாலி இறை வசனங்களை ஓதினார்.
தலைவர் லியாக்கத் அலி இவ்வாண்டு பேரவையின் செயல் திட்டங்கள் குறித்தும், தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்டவை குறித்தும் விவரித்தார்.
பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் பேராசிரியர் வருகையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், இயக்கப்பணிகள் குறித்தும் கூறினார்.
கூட்டத்தில் துணை தலைவர் காயல் நூஹு சாஹிப், பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் ஹபிபுல்லாஹ், அமைப்புச் செயலாளர் அப்துல் ரஹ்மான், துபாய் மக்கள் தொடர்பு செயலாளர் கீழை ஹமீது யாசின், அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை அன்சாரி, விழாக்குழு செயலாளர் பரக்கத் அலி, ஜமால், தேவிபட்டினம் நிஜாம் அக்பர், ரிஸ்வான் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.