நர்ஸுகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்.. கரூரில்!
கரூர்: கரூரில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் சார்பில் செவிலியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் ஒன்று நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் செவிலியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பினை நடத்தியது. நடைமுறையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காப்பதில் சிறந்து விளங்குபவர்கள் செவிலியர்களே.

ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்ற பணிவிடைகளை செய்யும் இந்த செவிலியர்களை பாராட்டும் வண்ணம் ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் கரூர் மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் செவிலியர்களுக்கு நோயாளிகளின் ஆலோசகர், நோயாளிகளின் ஆசிரியர் என்றெல்லாம் பாராட்டி ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தினர் அவர்களை கொளரவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் தலைவர் மீனா சுப்பையா, செயலாளர் கீதா கோபால், மக்கள் செய்தி தொடர்பாளர் ஜாஸ்மீன் மற்றும் உறுப்பினர்கள் ரம்யா, சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications