துபாய் வந்த சிங்கப்பூர் கலைக் குழு.. சிறப்பான வரவேற்பு
துபாய்: துபாய் வருகை புரிந்த சிங்கப்பூர் அரசின் கலை, கலாச்சார தூதுக்குழுவினருக்கு 18.12.2013 புதன்கிழமை மாலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் முதுவை ஃபரீஹுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர் மு. ஜஹாங்கீர், பொதுச்செயலாளர் சேக் காதர், தலைமை நிர்வாக அதிகாரி மைதீன் மற்றும் நிர்வாகக்குழுவினர் அமீரகம் வருகை புரிந்தனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் முதுவை ஃபரீஹுல்லாஹ் கூறும் போது சிங்கப்பூரில் தாங்கள் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வண்ணம் அமீரகத்தில் செயல்பட்டு வரும் சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து தங்களது செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள இப்பயணம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூர் அரசின் ஆதரவுடன் இக்குழு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவினரை சாதிக், முஹம்மது, அஹமது இம்தாதுல்லா, ஜஹாங்கீர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications