துபாயில் நடைபெற்ற பாரதி கண்ட பாரதம் சிறப்பு நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் பாரதி கண்ட பாரதம் எனும் சிறப்பு நிகழ்ச்சி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 131வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் 20.12.2013 அன்று மாலை துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் நாணய மாற்று சங்க தலைவர் மு. ஜஹாங்கீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாரதியின் பெருமைகளை வியந்து போற்றியதுடன், பாரதிக்கு உள்ள தன்னம்பிக்கை குறித்து விவரித்தார். மேலும் அவர் கூறுகையில், பாரதியார் நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புகளையும் மீறி தன்னம்பிக்கை மனிதராக வலம் வந்ததை தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Poet Bharathiar's B'day celebrated in Dubai

தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகத் திகழும் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் எனும் இஸ்லாமிய நாட்டில் விழா எடுத்து சிறப்புச் செய்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பொன்னாடையினை பிரசன்னா அணிவித்தார். புதிய நிலா பத்தாம் ஆண்டு மலரை ஜெயந்தி மாலா சுரேஷிற்கு வழங்கினார் மு ஜஹாங்கீர்.

Poet Bharathiar's B'day celebrated in Dubai

குறள் சொல்லும் நேரம், பாரதி குறித்த இன்று ஒரு தகவல், பாரதியின் தேச பக்திப் பாடல்கள், சாரே ஜஹான்சே அச்சா எனும் விடுதலை வேட்கைப் பாடல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகனாதன், பிரசன்னா, விஜயராகவன், விஜயேந்திரன், பாலா, சுந்தர் உள்ளிட்ட குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+