கல்ஃப் டுடே ஆசிரியர் விவேகானந்த் மரணம்
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான கல்ஃப் டுடே (Gulf Today) வின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் பி.வி. விவேகானந்த் (61). அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். ஊடகத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் விவேகானந்த்.
இளம் தலைமுறை பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்தி வந்தவர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த விவேகானந்த் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகம் வந்தார். அவர் முதலில் ஓராண்டு காலம் பஹ்ரைன் ட்ரிப்யூனில் துணை ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications