இத்தாலி 'எக்ஸ்போ மிலானோ 2015' கண்காட்சியில் அனைவரையும் கவரும் அமீரக அரங்கு
மிலானோ: இத்தாலியில் நடைபெற்று வரும் எக்ஸ்போ மிலானோ-2015 கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக சார்பில் பாலைவன மணல்திட்டு போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் எக்ஸ்போ மிலானோ 2015 என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக அரங்கு இடம்பெற்றுள்ளது. இந்த அரங்கு பாலைவன மணல் திட்டு போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கண்காட்சிக்கு வரும் அனைவரையும் இந்த அரங்கு கவர்ந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அமைத்துள்ள அரங்கு 3 வகையான கருத்துக்களை வெளியிடும் வகையில் உள்ளது.

கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தையும் குறிக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘கடந்த காலம்‘ என்ற தலைப்பில் அமீரகத்தில் கடந்த நூற்றாண்டின் மத்திய மற்றும் இறுதிக்காலத்தில் தண்ணீர் பெறுவதற்காக மக்கள் பட்ட துன்பங்களை விவரிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ‘நிகழ்காலம்‘ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அமீரகம் கடந்த காலத்தை வென்றெடுத்து தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ‘எதிர்காலம்‘ என்ற தலைப்பில் அரசின் எதிர்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலி சென்றுள்ள தமிழர்கள் ஜெயவேலு தலைமையில் அமீரக அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

கண்காட்சி பற்றி ஜெயவேலு கூறுகையில்,
ஐக்கிய அரபு அமீரக அரங்கு மிகவும் அருமையாக உள்ளது. அமீரக மக்களின் கலாச்சாரத்தை சிறப்பாக சித்தரித்து உள்ளார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய அரங்க. இந்த கண்காட்சிக்கு வரும் அனைவரும் அமீரக அரங்கை பாராட்டுகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications