தீயினில் ஒளிர்ந்த தீபங்களே!
கனவு கண்டோம் நாம்
கண் மூடி வாய் பிளந்து
கனவு கண்டோம் நாம்!
நீங்கள் வளர்ந்து
நாடாள்வதாயும்,
உங்கள் காலத்தில்
இந்தியா ஒளிர்வதாயும்.
சின்ன சின்ன வித்துகளாய்
முளைப்பாரி போட்டோம்.
முளைக்க முன்னே
செல்லரித்துப் போனதென்று
சொன்ன சேதி
பொய்யாகாதோவெனக்
கனவு கண்டோம்.
கூரைக் கட்டடத்தில்
குத்து விளக்கிருக்க
வானைத் தொடும்
அடுக்குமாடிக் கட்டடத்துக்கும்,
வானூடு போகும்
செய்மதிகளுக்கும்
கனவு கண்டோம்.
மரணத்தின்
வாசற்படிகளில்
உங்களை இருத்திவிட்டு,
மனித குல மேம்பாட்டிற்காய்
ஆலைகள் அமைக்கவும்
சாலைகள் போடவும்
கனவு கண்டோம்.
உங்களை எரித்த தீ
எங்கள் ஏழ்மையையும்,
செல்லரித்துப்போன
அரசியலையும்,
செல்லாக்காசான
தலைவர்களையும்
எரித்திடாதோவெனக்
கனவு கண்டோம்.
ஒவ்வொரு நிகழ்வின் பின்னும்
அனுதாபக் கண்ணீரையும்
ஆறுதல் வார்த்தைகளையும்
எவர் மீதாவது பழிபோடும்
அறிக்கைகளையும்
சமர்ப்பித்துவிட்டு
இத்தோடு தீரும் அவலமென்று
கனவு மட்டுமே கண்டோம்.
- ஈழநாதன் ([email protected])












Click it and Unblock the Notifications