கலைப்பலி
Subscribe to Oneindia Tamil
முதல்தரமான உணவில்
வளர்ந்தாய்
கல்வியும் உடையும்
உன் தரத்திற்காகவே
உயர்தரமானவை
மண்மகள் அறியா
பாதங்களோடுதான்
பள்ளிக்கும் வீட்டுக்கும்
பயணமானாய்
குளிரூட்டப்பட்ட அறையில்
சோம்பல் முறித்தாய்
பழம் பால்
தேனில்தான் மிதந்தாய்
இசை நடனம்
இன்னபிற கலைகளி-லெல்லாம்
நீதான் எல்லையானாய்
நீயும் அழகும்
அரங்கேற்றமானபோது
அடுத்தக் கட்டம்
கேள்வியானது
வாழ்வில் கலையா?
கலையே வாழ்வா?
பட்டிமன்றத்தில்
கலைப்பலி தீர்ப்பானது
இல்லறம் என்பது
இப்போதைக்கு இல்லை
ஒத்திப்போடப்பட்டது
இதயம்
இருள்வானம்
-வளிச்சத்தில் மின்னியது
நட்சத்திரம்
பூனைகளும் குரங்குகளும்
பிடித்தும்
பிரித்தும்
விருப்பம்போல் விளையாடின
ஆழ்மனமும் -வளிமனமும்
அழுததோ சிரித்ததோ
காப்பாற்றப்பட்டவை-யல்லாம்
காட்டப்பட்டுக்
கட்டுக்கட்டாய்க் குவிகிறது
அறையில்
கலை வளர்கிறது
திரையில்












Click it and Unblock the Notifications