For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி- முஹம்மது இஸ்மாயில்

By Staff
Google Oneindia Tamil News

கவிதை கண்கள்
வழியாக
வடித்த கண்ணீர்

விடியலில் வந்தாய்
ஆனால் எங்களுக்கு
இருளையே தந்தாய்
கரையை கடந்தாய்
ஆனால் எங்களை
நீரில் மூழ்கடித்தாய்

Dead bodies மூழ்கியவர்கள்
உயிரை இழந்தார்கள்
மூழ்காதவர்கள்
வாழ்க்கையை இழந்தார்கள்

நீ எல்லை
தாண்டிய பயங்கரவாதி
நீ கொன்று
குவித்த தீவிரவாதி

நம்பி பிழைத்து
வந்தவர்களை
மரணிக்கச் செய்தாய்
மரணித்து விட்ட
ஒற்றுமையை
பிழைக்க செய்தாய்

தலைப்புச் செய்திகள்
எல்லாம்
தலை போன செய்திகள்
தான்
இறந்தவர்கள் எண்ணிக்கை
பெட்ரோல் விலை
போல்
உயருகிறது
இழப்புகளை நினைக்கையில்
பெட்ரோல் தீ
போல்
எறிகிறது

கரைக்கு வந்தவர்கள்
காலடி சுவடுகள்
மட்டும் அழித்து
வந்த நீ
கரைக்கருகில் வசித்தவர்கள்
வாழ்ந்த சுவடுகளே
இல்லாமல் அழித்து
விட்டாயே!

கடற்கரை-
சிறு திருத்தம்
இனிமேல்
கடற்கறை
கடல் தாய்
உனது
பழைய பெயர்
கடல் அரக்கன்
உனக்கு
பொருத்தமான் பெயர்.

- அ. முஹம்மது இஸ்மாயில்([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. தேவை இந்த மனங்கள்
2. தாயின் காலடியில்..
3. மணவாழ்வு
4. அழகு
5. காதல் அழிவதில்லை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X