For Daily Alerts
Just In
எங்கும் நிறை இருட்டு ..- க்ருஷாங்கினி
எல்லோரின் கண்மீதும்
உறக்கத்தின் மூடியாய்
ஒரே ஒரு ஒளிப் பொட்டு
விழுந்த எண்ணெய்த் துளியாய்
விரிந்து பரவி வட்டமிட்டு
கண்ணெடுக்காமல் நான் கண்டேன்
ஒளித்துளி.
மறைந்தது திடீரென
அங்கும் இருளே
பள்ளம் நிறைந்தபடி
மறுபடியும் சிறு வட்டம்
தரை மீது மெல்ல மெல்ல
மேலெழும்பி மிதந்தபடி;
பூச்சரமாய் சுழன்று
இதழ் போல எம்பி
இறக்கை முளைத்தபடி;
அறையெங்கும் சிறகசைத்து
வண்ணத்தப் பூச்சியாய்
ஆங்காங்கே அமர்ந்தபடி
எந்தச் சிறு வழியே
அது ஏகுமோ என்றே
நான் பயந்தபடி;
ஜன்னலின் இடைக்கம்பி
சிறகசைத்து வெளியோடி
ஒளித் திவலை விளையாட
இருள் எங்கோ ஒளிந்ததடி!
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]