அழகே உன் பொருளென்ன?
அழகு...
பிரபஞ்சத்தில்
இயற்கை
செய்த பாரபட்சமா?
அழகு...
விழிகளில் நுழைந்து,
மதிதனை மயக்கி,
மொழியினை தவிர்த்து,
இதயத்தை ஈர்க்கவோ?
அழகிய வெந்நிலவே
உன் ஒளியில்
நனைந்து,
நினைவை மறந்து
கற்பனையில் லயித்து,
கவிதை எழுதாத
கவிஞன் உண்டோ?
இருந்தும்
உயிரினம் இல்லாத
மயானமாய் நீ... ஏன்?
ரோஜா
உன் வண்ணங்கள் பல,
மடல்களால் நீ எழுதும்
மெளனக் கவிதைகள்
ஆயிரம் இருந்தும்...
உன் இதழ்கள்
இமைப்பதற்கு
முன்...
முட்கள் முளைப்பது
ஏன்?
உன் இதழ்கள் விழுந்த பின்னும்
முட்கள் வலுப்பது ஏன்?
நீல நிற கடல்,
விழியை விழுங்கும் அழகு,
விண்ணை முட்ட நீர்,
உன் முன் பலர் தாகத்துடன்
தவிப்பது ஏன்?
புரிந்தது...
அழகு
ரசிப்பதற்காக...
வசிப்பதற்கு
அல்ல...
- மோகன ரங்கன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications