நீ--- நான்-நினைவுகள்- பத்மப்ரியா
Subscribe to Oneindia Tamil
நீ சாய்ந்து நின்ற
ஆற்றுப்பால சுவரில்
ஆதரவாய் சாய்ந்தேன்
அந்தி வானத்தை ரசிப்பது போல
நீ நடந்த
மலைக்கோயில் கற்படியில்
முழங்கால்களில்
முகம் புதைத்து அமர்ந்ந்தேன்
இறைவனை வேண்டுவதாய்
மழை தழுவிய ரயில் பாதையில்
அமைதியாய் நடந்தேன்
உன் அடிச்சுவடுகளைத் தேடி
உன் கரம் பட்ட ஆலின் விழுதுகளை
நானும் பிடித்தேன்
உன்னைத் தொடுவதாய்
உன் நினைவுகளின் மீதங்களைத் தேடி
நான் தொலைந்தேன் நமது கல்லூரியில்
உன்னைத் தான் வேண்டாம்
உன்னை சார்ந்த இடங்களை விரும்பலாம் அல்லவா?












Click it and Unblock the Notifications