For Daily Alerts
Just In
நீ--- நான்-நினைவுகள்- பத்மப்ரியா
நீ சாய்ந்து நின்ற
ஆற்றுப்பால சுவரில்
ஆதரவாய் சாய்ந்தேன்
அந்தி வானத்தை ரசிப்பது போல
நீ நடந்த
மலைக்கோயில் கற்படியில்
முழங்கால்களில்
முகம் புதைத்து அமர்ந்ந்தேன்
இறைவனை வேண்டுவதாய்
மழை தழுவிய ரயில் பாதையில்
அமைதியாய் நடந்தேன்
உன் அடிச்சுவடுகளைத் தேடி
உன் கரம் பட்ட ஆலின் விழுதுகளை
நானும் பிடித்தேன்
உன்னைத் தொடுவதாய்
உன் நினைவுகளின் மீதங்களைத் தேடி
நான் தொலைந்தேன் நமது கல்லூரியில்
உன்னைத் தான் வேண்டாம்
உன்னை சார்ந்த இடங்களை விரும்பலாம் அல்லவா?
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]