காட்சிப் பிழை!
Subscribe to Oneindia Tamil
வெகு சந்தோஷமாயிருந்தது
குழந்தை பிறக்கப்போகிறது
என சொன்னபோது
அதுவும் முதல் குழந்தை
கேட்டவுடன் அதிகம் மகிழ்ந்தாள் என் மனைவி
என்ன பேர் என்ன உடை என
பார்த்துப் பார்த்து .....
என்னவாயிற்று என்
செல்லமே...
நீ
அழுகையினூடே என்னை
உதைத்திருக்கலாம்
என் மேல் உன் பிஞ்சுக்கரம் பரப்பி
கோபமாய் என் மீசை பிடித்திழுத்திருக்கலாம்
நான் உன்னை உயரே வீசிப் பிடிக்கையில்
சிறுநீரால் என் மேல் பனியனை
நனைத்திருக்கலாம்
இப்படி எதுவுமேயில்லாமல்
இறந்தே ஏன் பிறந்தாய்
என் செல்லமே?....












Click it and Unblock the Notifications