மரங்களே... ஓ .. மரங்களே!

Subscribe to Oneindia Tamil
Trees
மரங்களை நான் நேசிக்கிறேன்
மனிதர்களை விடப் பிரியமாய்
நேசிக்கிறேன்.

இலையுதிர் காலத்தில் கோபித்துக் கொண்டாலும்
இனிய வசந்தத்தில்
என்னைக் காதலிக்கின்றன

ஓரோர் மரங்கள்
இரவிலே செல்லச் சிணுங்கலுடன்
இலைகளைக் கவிழ்த்துக் கொள்ளும்

ஆயினும் பகலில்
பல்வேறு நிறங்களில்
மெல்லிய மஞ்சளில்..

மிதமான அரக்கு வண்ணத்தில்
கரும் பச்சையாய் ..

இளம் பச்சையாய்

கண் சிமிட்டிச் சிரிக்கும்
நான் அருகே வர வேண்டுமாம்
பிடிவாதமாய்த் தவம் செய்கின்றன

அருகிருக்கையிலே
தாழக் கிளை பரப்பித்
தொட்டு விட ஏங்கும்

தூரத்தில் செல்கையிலோ
கரமசைத்துக் கூப்பிடும்

ஆற்றங்கரையோரம் நிழற்படுகை போடும்
மலர்களை மட்டுமல்ல
மழைத் துளிகளையும் சுமக்கும்.

பூக்களில்லாத ஊசி மரங்களும்
நேசிக்கத் தகுந்தவைகளே

சிவப்புத் தொப்பியுடன்
நெருப்புக் கொன்றை
என்னைக் கண்டவுடன்
தலை குனிந்து வரவேற்கும் மூங்கில்.

என்னைப் போல
திமிருடன் நிற்கும் யூகலிப்டஸ்
இப்படி ..
எத்தனை .. எத்தனை .. மரங்கள்
என்னை நேசிக்கின்றன!

அதனால்தான் சொல்கிறேன்
மரங்களை வெட்டாதீர்
வெட்டுகையில்
என்
இதயத் துடிப்பு
மெல்ல மெல்லக் குறையும் ..

நன்றி: "முரண்பட்ட முகங்கள்"


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+