முகம்
கண்ணாடியே பார்த்ததில்லை தான்!
பொங்கி வழியும் கன்னங்கள்- - தினம்
பெண்மை துளிர்த்த கதை சொல்ல,
வெள்ளையாய் விழிக்கடலில்
கருகருவென மீன்குஞ்சாய்
கனவிலும் கவிதையிலும்
விடிந்தது எப்படி? என விடைதேடும்
முத்தப் பார்வைக்கு பயந்தே
முன்னெல்லாம்
கண்ணாடியே பார்த்ததில்லை தான்!!
.....
இப்போதெல்லாம்.....
பொங்கி வழியும் கன்னங்கள் -- தினம்
பெண்மை தவித்த கதை சொல்ல,
உன் விரல் நகம் பட்டு - என்
ஒரு காலையேனும் விடியுமா என விடைதேடும்
பசலைப் பார்வைக்கு பயந்தே
என்னைக்
கண்ணாடியில் பார்ப்பதில்லை நான்!!
இவரது முந்தைய படைப்புகள்:
1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
4. மழையில் குடை
5. அறுந்து போன ஒரு இழை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications