மெளனங்கள்!
உயிரைக் கையில் பிடித்தபடி
ஒவ்வொரு நொடியையும்
என்னைப் போலவே கரைத்திருக்குமோ?
சாலையின் மஞ்சள் கோட்டில்
உதிர்ந்து கிடக்கும்
என் ரோசாப்பூ
ஒரு மகரந்தம் கூட
உன்னைப் போலவே
விரலில் ஒட்டவில்லையே..?
பூவின் உதட்டில் பலமுறை
தேன் பருகிய வண்டிற்கு
கிளை வெறுத்தா..?
இல்லை, கிளையை வெறுத்தா..?
எப்படி விழுந்திருக்கும்,
இந்தக் கொழுந்து இலை மட்டும்?
ஒரு மனசில் மட்டும்
ஓராயிரம் கேள்விகள் ..
என் அத்தனை கேள்விக்கும் பதிலாய் ..
மொத்தமாய் உன்னிடம் சில மெளனங்கள்

இவரது முந்தைய படைப்புகள்:
1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
4. மழையில் குடை
5. அறுந்து போன ஒரு இழை
6. முகம்
7. இதுவும் சுகம்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications