For Daily Alerts
Just In
சிம்மாசனம்!
ஜெயகாந்தன் !!
இன்றைய தமிழிலக்கியத்திற்கு
பாரதிய ஞானபீடப்பரிசை
ஈட்டித் தந்த விடிவெள்ளி !
நவீன
தமிழிலக்கிய உலகின்
உச்சம் காட்டிய
தேவதூதன் !
இக்கால இலக்கியத்தின்
இன்னொரு சகாப்தம் !
மனதில் பட்டதை
மறைக்காமல் எழுதிய
படைப்புலக பிரம்மா !
இன்றைய
தமிழிலக்கியப் போக்கின்
கணபரிமானத்துக்கு
கட்டியங்கூறும்
பிதாமகன் !
காந்த எழுத்துகளில்
கனமான விசயங்களை
கற்கண்டுச் சுவையாய்
கலந்து நின்று
வாசகர் உள்ளங்களை
வசியம் செய்த எழுத்தாளன்..
இந்த
உயரிய விருது
அவரின் எழுத்துக்கான
அங்கீகாரம் மட்டுமல்ல..
செம்மொழிக்குக் கிட்டிய
சிம்மாசனமும் கூட..
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]