'இலையுதிர் காலம்'
Subscribe to Oneindia Tamil
-சண்முகா
பூ மாறி ! பொழியும்
பலவண்ண இலைப்படுகை
இங்கும் அங்குமாய் ஆடி
இறகெனப் பறந்து
பூமிதனில் படர்ந்து விழும்
மனம்பரப்பா மலர்த்தூவல்.
மஞ்சளாகி, சிவப்புமாகி, சருகாகி
மறைகின்ற பசுமை.
உதிரும் இலைகளில்
உயிர் தான் இருக்குமோ ?
உறைபனி வருமுன்
உடை களையுதே மரம் !
ஆடை களைந்தே மொட்டையாய்
வாடையில் வாடுமே !
சிலிர்க்காமல் உதிர்த்து
சில்லென்ற குளிர்தாங்கி
இளந்தளிர் துளிர்க்கக் காத்திருந்து
எத்துன்பமும் தாங்கிடுமோ ?
பச்சிலைப் படரலை எண்ணி
புத்துயிர்தான் கொள்ளுமோ !












Click it and Unblock the Notifications