For Daily Alerts
Just In
பதநீர் குடிக்க வாரீயளா?
- சண்முகா
காலை வேளையிலே
கால் கடுக்க நடக்குமவள்
மனச்சுமை கீழிறக்க
தலைச் சுமை ஏற்றிடுவாள்.
பனையில் கள்ளிறக்கி
சுண்ணாம்பு சிறிது சேர்த்து
வெள்ளை நிறத்துக்
கள்ளினைத் திரிக்க
பானையில் அதைக் கலக்கி
வீதிமுனை வந்து நிற்பாள்.
பனை ஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி
ஆழாக்கு எடுத்தே
ஆள் ஆளுக்கு அளந்திடுவாள்.
இருகைப் பிடித்து
இமை மூடிப் பருகிட
தேனான பதநீர்
தித்திப்பாய் உள் இறங்கும்.
தெவிட்டாத நீரதனால், பதநீர்
நம் உடலுக்கு என்றும் இதநீர்!
- சண்முகா ([email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:08 [IST]