For Daily Alerts
Just In
கடவுள்...
கடவுள் எனக்கு பரிச்சயிக்கப்பட்டார்
ஒரு கையில் வேலுடனோ அல்லது
கொடிய ஆயுதங்களுடனோ
காலடியில், கையில், கழுத்தில் அல்லது
பக்கத்தில் ஏதோ ஒரு விலங்கினூடே
கடவுள் எனக்கு பரிச்சயமானார்
ஏதோ செய்யாத குற்றத்திற்காக
மரச்சட்டங்களில் பிணைக்கப்பட்டு
கடவுள் எனக்கு பரிச்சயமானார்
சற்றும் புரியாத வாக்கியங்களில்...
இவைகள் தவிர்த்து
நான் என் பிள்ளைகளிடம் கூறும் வகையில்
என்றேனும் உருவம் பெறலாம்
கொடிய ஆயுதங்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும்
மரச்சட்டங்களிலிருந்தும்
விடுதலைபெற்று....
என்றேனும் தோன்றலாம் எனக்கு பிடித்தவகையில்
கடவுள்....
- ரிஷி சேது ([email protected])
Story first published: Tuesday, March 11, 2008, 10:53 [IST]