அத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு!
Subscribe to Oneindia Tamil
- யாழினி வளன்
என் கவிதைகளில்
சிறந்தது எதுவென
தோழிகளை கேட்டு
தொந்தரவு செய்ததுண்டு
கல்லூரி காலங்களில்
கல்யாணத்திற்கு பிறகு
என் கேள்வி
இடம் மாறியது
என் கணவிரிடம்

இப்போது யாரிடமும்
கேட்பதே இல்லை
என் கேள்வியின்
பதிலாய் நீ
எனக்குள் வந்தாய்!
நான் காகிதங்களில்
எழுதி கிறுக்கிய
அத்தனை கவிதைகளின்
அழகையும் ஓரம்
தள்ளி விட்டு
அழகாய் வந்து
அமர்ந்தாய் நீ
என் கருவில்
ஒரு குட்டி
கவிதையை போல !
உன் கருவிழியில்
விழி அசைவினில்
கன்னகுழி அழகில்
வாய்வழி தேனில்
கூந்தல் கீற்றில்
விரல் வீணையில்
மழலை மொழியில்
தோற்று போனது
என் கற்பனை
கவிதைகள் !!!












Click it and Unblock the Notifications