கொரோனாவால் வீடுகளில் முடங்கிய மக்கள் - தொலைக்காட்சியில் லைவ் திருப்பலி - வீடுகளில் பிரார்த்தனை
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் தேவாலயங்களில் மக்கள் இல்லாமலேயே திருப்பலி நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திருப்பலிகளை பார்த்து மக்கள்
சென்னை: கிறிஸ்த மக்களின் தவக்காலம் சிறப்பு வாய்ந்தது. தேவாலயங்களில் பிராத்தனைகளை களைகட்டும். இந்த ஆண்டு வீடுகளிலேயே பிரார்த்தனை செய்யும் அளவிற்கு கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகள் இன்னும் 10 நாட்களில் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரபல தேவாலயங்களில் நடைபெறும் திருப்பலி நிகழ்வுகள் லைவ் ஆக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அதனை வீட்டில் இருந்தே காணும் கிறிஸ்தவ பெருமக்கள் தங்களின் பிரார்த்தனைகளை முடித்துக்கொள்கின்றனர்.
Recommended Video
உலகம் முழுவதும் பத்து லட்சம் மக்களை பதம் பார்த்துள்ளது கொரோனா வைரஸ். 50 ஆயிரம் பேரை பலிவாங்கியுள்ளது, இன்னும் பல லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மூடப்பட்டாலும், ஆகம விதிகளின்படி பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
ஹோலி கொண்டாட்டங்கள் இல்லை, யுகாதி கொண்டாட்டங்கள் இல்லை, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்கள் பொது இடங்களில் கூட முடியாது. வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

ஈஸ்டர் தவக்காலம்
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான தவக்காலம் பிப்ரவரி 26 ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. இந்த நாற்பது நாட்கள் தவக்காலத்தின் போது பல்வேறு பக்தி வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிர்த்தல், நோன்பு இருத்தல். அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

வெறிச்சோடிய தேவாலயங்கள்
கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தேவாலயங்களில் மக்கள் யாருமின்றியே பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனின் புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

போப் ஆண்டவர் பிரார்த்தனை
போப் ஆண்டவர் தனியாகவே பிராத்தனை நடத்தியது உலக வரலாற்றிலேயே இதுவரை நடைபெறாத நிகழ்வாகும். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வாடிகன் அறிவித்தது.

நேரடி ஒளிபரப்பு
புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்கள் வராவிட்டாலும், திருப்பலி நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மிகவும் விசேஷமானது ஆகும். தேவாலயங்களில் சென்று வழிபட முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளிலேயே தொலைக்காட்சி வழியாக திருப்பலி நிகழ்வுகளை கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புனித வெள்ளி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தான் தவக்காலம் ஆகும். சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு புனித வெள்ளி வரும் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. வழக்கம் போல கொண்டாட்டங்கள் எதுவுமின்றி இந்த ஆண்டு வீடுகளிலேயே பிரார்த்தனைகளை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர் கிறிஸ்தவ பெருமக்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications