Guru Vakra Peyarchi: ரிஷப ராசி பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு கொட்டும்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு வக்கிரம். ஏற்கனவே விவாகரத்துக்கு அப்ளை செய்தவர்களுக்கு கண்டிப்பாக பிரிவு ஏற்படும். மீண்டும் இணைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒன்னு சேரும் வாய்ப்பு உண்டு. காணாமல் போன பணம், சேமித்து வைத்த பணம், காதலிக்கு கொடுத்த பணம், நண்பர்களுக்கு கொடுத்த பணம் போன்றவை கட்டாயமாகத் திரும்ப கிடைக்கும்.
நகை மீட்பு
நகையை அடகு வைத்தவர்களுக்கு மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். மனம் குளிரக்கூடிய சூழல் உண்டாகும். குடும்பங்கள் சேரும். முக அமைப்புகளில் சைனஸ் பாதிப்புகள், கண் பாதிப்புகள், பல், ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அவற்றுக்கான மருத்துவம் பெற்று குணமடைவீர்கள். கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்வீர்கள்.
குடும்பம்
குழந்தைகள் தொடர்பான செலவுகள் ஏற்படும். குழந்தைகளுக்காக படும் கஷ்டங்களில் வெற்றிகள் ஏற்படும். நிறைய குழந்தைகளுக்கு மருத்துவர்களாக மாறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். நல்ல கல்லூரியில் சீட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் வாய்ப்புகள் வந்து சேரும். யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டியது எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு அருமையான சூழ்நிலை ஏற்படும். பெண்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் சொல் பேச்சு கேட்டு செயல்படக் கூடாது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கழுத்து, நரம்புப் பகுதியில் பாதிப்பு ஏற்படும்.
வழிபாடு
என்னதான் இருந்தாலும் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் நன்மைகளை மட்டுமே ஏற்படுத்தும். சந்தோஷம், பொருளாதார ஏற்றத்தையும் பொருத்தவரை 85 சதவீதமும் அருமையாக உள்ளது. ராமானுஜரை வழிபடுவது சகல விதமான ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications