கன்னி ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம்.. தடைகள் உடைந்து அதிர்ஷ்டம் கைகூடும்!
Kanni Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றிலும் இழுபறியான நிலைமைகள் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல அனுகூலங்கள், ஏற்றங்கள் காணப்படும்.
தடை நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். சிறு சிறு சஞ்சலங்கள் காணப்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மரண பயம் நீங்கும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். செவ்வாய் கெட்டுப் போயிருந்தாலும் ராஜயோகத்தை கொடுப்பதால் நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
ஆரோக்கியம்
நல்ல ஸ்தானத்திற்கு வரும் யோகம் உண்டு. கன்னி ராசியினருக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் இருந்தாலும், இறுதியில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும் காலமாக அமையும். குறிப்பாக, மனதில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் குறைந்து, வாழ்க்கையில் ஒரு தெளிவு கிடைக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
உடல்நலத்தில் சிறிய சோர்வு இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. நேரத்திற்கு உணவு, ஓய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரம் பெருமாள் வழிபாடு உங்களுக்கு பெரிய ஏற்றத்தையும் மன அமைதியையும் தரும். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மையை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான தகவல்கள் வரக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாப வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உருவாகும். குறிப்பாக நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த தடைகள் மற்றும் வழக்கு பிரச்சனைகள் சாதகமாக முடியும். செவ்வாய் தொடர்பான பாதிப்புகள் இருந்தாலும், அதே சமயம் ராஜயோக பலன்களையும் தருவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications