Magaram: மகர ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்.. ஆனா நம்பி ஏமாறுவீர்கள் கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு எல்லா கிரகங்களும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் இருக்கிறது. ராகு பகவான், சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். எதைத் தொட்டாலும் மதிப்பாகும் காலகட்டம். எந்த விஷயத்தை செய்தாலும் அதில் பணம் வரும். 5க்கு உடைய யோகாதிபதி சுக்கிரன் 3 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.
யோகம்
சனி பகவானும் 3 இடத்தில் சுக்கிரனோடு சேருகிறார். எல்லா விதமான யோகங்களும் உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். சொந்த வீடு கட்டுவது, வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டமாக இருக்கும்.
சேமிப்பு
எந்த காரியமாக இருந்தாலும் அது டக்கென்று நடக்கும். நிறைய அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். பணம் வருவதற்கான வழிகளைக் கண்டறிவீர்கள். நிறைய விஷயங்களை படிக்கும் யோகம் உண்டாகும். சேமிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடிவெடுப்பீர்கள். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
முதலீடு
ஷேர் மார்க்கெட், இன்வெஸ்மென்ட் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிர பகவான் உச்சத்தை தொடர்ந்து, 2 ஆம் இடத்தில் ராகு இருப்பது பெரும் பணம் வரும். பெரும் பணம் வருவதற்கான முதலீடுகளைத் தொடங்குவீர்கள். பிசினஸை டெவலப் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய கிளைகளை தொடங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
அனுகூலம்
2 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கொடுக்கல் வாங்கல் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டம். 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் இடம், நிலங்களை விற்பது, அதற்கு விளம்பரம் செய்வது போன்ற யோகம் உண்டாகும். 8க்கு உடையவர் 3 இல் மறைந்து விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கப் போகிறார். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்வீர்கள். அரசின் அனுகூலம் உண்டாகும்.
விபரீத ராஜயோகம்
12க்கு உரிய குரு பகவான் 6 இல் மறைந்து விபரீத ராஜயோகம், சூரியன் மறைவதால் விபரீத ராஜயோகம், சுக்கிரன் உச்சம் என அற்புதமான காலகட்டமாக இருக்கும். அனைத்து கிரகங்களும் 2 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளது என சகலவித யோகங்களும் உண்டாகும். நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். யார் எதை சொன்னாலும் நம்பும் காலகட்டம். அதனைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் சொல்வதை கேட்டு தெரியாத தொழிலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
8க்கு உடைய சூரிய பகவான் 3 இல் மறைந்து விபரீத ராஜயோகம் பெறுவதால் சிவன் வழிபாடு, காலபைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பைரவருக்கு புணுகு சாற்றி வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications