மகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுக்க தடை
மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டமாக வந்து திதி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம் கடற்கரையில் திதி கொடுக்கவும். சாமி தரிசனம் செய்யவும் தடை
திருச்சி: திருச்சியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை உட்பட நீர்நிலைகளுக்கு திதி கொடுக்க பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் 30.09.2020 நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் வியாழக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, வடக்கு வாசல் கொள்ளிடம் ஆறு, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஒடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் மகாளய அமாவாசையை முன்னிட்டு மேற்படி நீர்நிலைகளுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடித்து திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடை உத்தரவை மீறி நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் மகாளய அமாவாசை அன்று கோடியக்கரை கடலில் புனித நீராடி பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயில் அருகே உள்ள கடலிலும் கோயில் தீர்த்த குளத்தில் புனித நீராடி செல்வார்கள்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக வருகின்ற 17 ஆம் தேதி நடைபெற உள்ள அமாவாசை தினத்தன்று கோயில் திறக்கப்பட மாட்டாது என்றும் அன்று பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications