திருமணம்- புத்திரபாக்கியம் பெற தாடகாந்தபுரம் ஈசனை வழிபடுங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
மனித வாழ்க்கையில் முக்கிய கட்டம் திருமணம்... அந்த திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்திற்குப் பின்னர் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ தஞ்சை மாவட்டத்தில் உள்ள தாடகாந்தபுரம் வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை சமேதராய் விளங்கும் ஸ்ரீ விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம், புத்திர பாக்கியம் கைகூடும் என்கின்றனர். இது மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியதாக அமையப் பெற்ற திருக்கோயிலாகும்.
இன்றைய ஆலய தரிசனத்தில் நாம் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமியைத்தான் தரிசிக்க இருக்கிறோம்.

வரலாற்று சிறப்பு:
இராமயண நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில் இராமபிரான் தாடகியைத் துரத்தி வந்ததாகவும் அந்த அரக்கி இவ்வூரில் ஒழிந்து கொண்டு ஓர் இரவு தங்கியதாகவும் மறுநாள் இராமபிரானால் வதம் செய்யப்பட்டார் எனவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன. எனவே தான் தாடக + அந்த + புரம்= தாடகாந்தபுரம் என்று வழங்கலாயிற்று.
அம்பிகை
காசியிலிருந்து த்ன் பதியான விஸ்வநாதருடன் திருவாஞ்சியத்திற்குக் கார்த்திகை ஞாயிறு அன்று கங்கையில் புனித நீராட வந்த விசாலாட்சி கால்வலி தாங்க முடியாமல் இந்த வளப்பாற்றங்கரையில் அமர்ந்ததோடு சிவபெருமானை மேற்கு முகமாக வைத்து பூஜித்தாள். அந்த காசிலிங்கம் இன்றும் வாகன மண்டபத்திற்கு அருகில் பெரிதாக உள்ளது.
சோமவாரத்தில் வளப்பாற்றங்கரையில் ஸ்நானம் செய்து வில்வதளத்தால் சிவலிங்கத்தையும் விஸ்வநாதரையும் வழிபடும் பக்தர்கள் காசிக்கு சென்றபலனைப் பெருவதோடு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெறுவர். இத்தலத்து சிவபெருமானை பூஜித்தால் நூற்றியெட்டு லிங்கங்களைப் பூஜித்த பலனோடு குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என அம்பிகை கூறுகிறாள்.
அம்பிகையின் சிறப்பு
பாடல் பெற்ற திருத்தலங்கள் பலவற்றிலும் தமிழகத்துச் சிவாலயங்களிலும் அம்பிகை நின்ற கோலத்தில் தான் காட்சி தருகிறாள். தஞ்சை தாடகாந்தபுரத்தில் மட்டுமே அம்பிகை விசாலாட்சி என்னும் நாமத்தில் அமர்ந்த நிலையில் ஒருகையில் தாமரை மலர் ஏந்தி அருள் பாலிக்கிறாள்.
தனி சிறப்பு
இத் திருக்கோயிலில் காமிகம் என்ற ஆகம முறைப்படி இருகால பூஜை நடைபெறும். இவ்வாலய சுவாமிக்கு சோடச முறையில் பதினாறு அபிஷேகங்களை முறையாக செய்வோருக்கு பதினாறு செல்வங்களும் கிட்டும் என்பதும் திருமணம்-புத்திரபாக்கியம் ஆகியவை நல்லவிதமாக அமைய அம்பிகையை பிரார்த்தித்துச் செல்லலாம் என்ற ஐதீகமும் பக்தர்களுக்கிடையே இருந்து வருகிறது.
ஊரின் அமைப்பு:
இவ்வூரின் அமைப்பானது வானிலிருந்து பார்க்கையில் தேனிருக்கும் கூடு போலவும் பிரணவ வடிவமாகவும் தெரிவது அதிசயமாகும்.
அமைவிடம்:
திருவாரிரூரிலிருந்து நன்னிலம் செல்லும் செல்வபுரம் வழியாகவும் கும்பகோணத்திலிருந்து குடவாசல் நன்னிலம் பேருந்து வழியில் மாப்பிள்ளைக்குப்பம் ஆனைக்குப்பம் வழியிலும் பேருந்தில் செல்லலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications