ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்
துலாம் ராசியில் சூரியன் இருக்கும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ர பலம் கிடைக்கும். அஷ்ட லட்சுமி யோகமும் கூடி வரும்.
சென்னை: சுக்கிரன் ஆசியும் பார்வையும் கிடைத்தால் ஒருவர் ராஜா போல சகல சந்தோஷங்களையும் அனுபவிப்பார். சுக்கிரன் வீடான துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு அரசாளும் யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும். அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் கிடைக்கும். ஐப்பசியில் குழந்தை பிறந்தால் ஆபத்து வருமோ என்று அஞ்சத்தேவையில்லை.
நவகிரகங்களில் சுக்கிரன் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார்தான். களத்திரகாரகன், கலைகளின் நாயகன், சுக காரகன் கவிதரும் கிரகம் என்றெல்லாம் போற்றப்படுகிறார் சுக்கிரன். சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்து அவருடைய தசை நடைபெற்றால் அளப்பறிய ஆற்றலும் செல்வமும் கிடைக்கும்.
பொதுவாக ஐப்பசியில் குழந்தைகள் பிறந்தால் அது வறுமையில் வாடும் என்றும் அரசு வேலைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்றெல்லாம் யோசிப்பார்கள். அது தவறான கருத்து. சூரியன் நீச்சமாக சஞ்சரிக்கும் ஐப்பசியில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் பேரரசனாக பலம் வாய்ந்த அரசனாக திகழ்ந்தவர். அவர் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

அலங்கார பிரியர்கள்
சுக்ரபலம் கூடிய துலாம் மாதத்தில் சூரியன் சஞ்சரிக்கும் அமைப்புள்ள மாதம் தான் ஐப்பசி மாதம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்கள். அலங்கார பிரியர்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்கள்.

தராசு
ஐப்பசி மாதம் துலாம் மாதம் தராசுதான் அடையாளம். தராசு சரிசமமாக எடை போடும். அதே போல குணாதிசயம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள். நீதியையும்,நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ருசிப்பிரியர்கள்
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் போஜனப்பிரியர்கள். ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். உணவு உட்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். விதவிதமான உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயதிலேயே உருவாகும்.

கோபமும் குணமும்
இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நிரந்தர பகைவர்கள் இருக்க மாட்டார்கள். நட்புக்காக எதையும் செய்வார்கள். இவருடன் சிநேகம் வைத்துக்கொண்டவர்கள் எந்த காலத்திலும் பிரிய நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் கோபமும் அதிகம் வரும் குணசாலிகளாகவும் இருப்பார்கள்.

நீதிமான்கள்
நீதிபதி, வக்கீல்கள் போன்றவர்கள் துலாம் ராசியில், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் காவிரியில் நீராட வேண்டும். துலா ஸ்நானம் சிறப்பானது. முற்பிறவி பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. நோய்களையும் நீக்கும். மாதத்தின் கடைசி மூன்று நாட்களும், கார்த்திகை 1ஆம் தேதியும் நீராடலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications