உலகம் முழுக்க பரவும் கொரோனா வைரஸ் - இந்த 5 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை
கொரோனா வைரஸை எதிர்த்து அனைவரும் போராட தயாராகி வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பற்றி பரவி மனிதர்களை மட்டுமல்லாது பொருளாதாரத்தை கபளீகரம் செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியு
சென்னை: கொரோனோ வைரஸ் பாதிப்பால் அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி, தகவல் தொடர்புதுறை, ஐடி நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா சுற்றுலாத்துறையும் படுத்தே விட்டது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். டிசம்பர் 25ஆம் தேதி ஆறு கிரக சேர்க்கை சூரியகிரணத்தின் போது சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.
இந்த வைரஸ் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டுள்ளது. தன் கோர நாக்கினால் அனைவரையும் விழுங்க தயாராகி வருகிறது. மார்ச் 22ஆம் தேதி மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடையும் போது இந்த வைரஸ் தாக்கம் அதிகம் தீவிரமடையும் என்றும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை வீரியமாக பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குரு அதிசாரமாக மகரம் ராசிக்கு மாத இறுதியில் சனியோடு இணைகிறார். குரு பகவான் மீண்டும் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு செல்லும் போது கொரோனா வைரஸ் தீவிரம் குறையும். இந்த கால கட்டத்தில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதும் ஜோதிடர்களின் கணிப்பாகும். இந்த பதிவு யாரையும் பயமுறுத்துவற்காக இல்லை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ராகுவினால் பரவும் கொரோனா
கொரோனா வைரஸ் ஏன் வந்தது எப்படி வந்தது என்று பார்த்தால் காற்று ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது காற்று மூலம் வியாதிகள் பரவும் என்பது ஜோதிட விதி. மிருகஷீரிடம், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 3 பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளது. திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு பகவான் இப்போது மிதுனம் ராசியில் அதுவும் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ராகு நிழல் கிரகம். 2020ஆம் ஆண்டு ராகு ஆண்டு. ராகு இப்போது திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார். மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவினால் காற்றில் பிரச்சினை மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் வேகமாக காற்று போல பரவுகிறது. கொரோனா வைரஸ் ஏன் வந்தது எப்படி வந்தது என்று பார்த்தால் காற்று ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது காற்று மூலம் வியாதிகள் பரவும் என்பது ஜோதிட விதி. மிருகஷீரிடம், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 3 பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளது. திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு பகவான் இப்போது மிதுனம் ராசியில் அதுவும் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ராகு நிழல் கிரகம். 2020ஆம் ஆண்டு ராகு ஆண்டு. ராகு இப்போது திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார். மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவினால் காற்றில் பிரச்சினை மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் வேகமாக காற்று போல பரவுகிறது.

நுரையீரல் பாதிப்பு
காற்றிலே விஷம் பரவி மனிதர்களின் நுரையீரலை தாக்குகிறது. மிதுனத்தில் உள்ள ராகு பகவானை இப்போது தனுசு ராசியில் இருந்து செவ்வாய், குரு, கேது பார்க்கிறார்கள். குரு மகரம் ராசியில் நீசம் பெற்றிருக்கும் போது குருவின் பாதம் கிடைக்காமல் போகிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிறது. வைகாசி மாதம் அதாவது அக்னி நட்சத்திரம் நீடிக்கும் வரை வேகமாகவே இருக்கும். ராகு மிருகஷீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையும் போது வீரியம் குறையும். எனவே மக்கள் தங்களைத்தாங்களே தற்காத்துக்கொள்வதே நல்லது. இன்னும் இரண்டு மாதத்திற்கு மக்கள் கவனமாக இருப்பது அவசியம்.

நோயை தரும் ராகு
மிதுனம் ராசியால் கைகள், தோல்பட்டை, நரம்பு மண்டலம், நுரையீரல் பகுதிகள் ஆளப்படுகிறது. இந்த ராசியில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது பாதிப்புகள் வரலாம். இப்போது ராகு நுரையீரல் பகுதியில்தான் சஞ்சரிக்கிறார். இதனால்தான் நுரையீரல் தொடர்பான நோயினால் மக்கள் பாதிக்கின்றனர்.

பாதிப்பு யாருக்கு
இந்த கிரக சஞ்சாரம், கொரோனா வைரசினால் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம், நெருப்பு ராசியான தனுசு, நில ராசியான மகரம் ராசிக்காரர்களும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுங்க. விஷ்ணு சகஸ்ரா நாமம் படிங்க, புதன் காரகமான மீனாட்சி அம்மனை வணங்குங்க. மகா விஷ்ணுவை வணங்குங்க. இந்த வழிபாடுகளை வீடுகளில் இருந்தே செய்யலாம் துளசியை சாப்பிடலாம் தொண்டைக்கு இதமாக இருக்கும் நுரையீரல் பாதிப்பகள் வராது.

பரிகாரம் என்ன
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நாளில்தான் நடராஜர் திருநடனம் ஆடுகிறார். இப்போது திருவாதிரை நட்சத்திரமும் வெடித்து சிதறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்வதை தரிசனம் செய்தால் பாதிப்புகள் கட்டுப்படும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சிவ ஆலயங்களில் ருத்ராபிஷேகம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications